sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கு தஞ்சாவூர் மாணவி தேர்வு

/

இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கு தஞ்சாவூர் மாணவி தேர்வு

இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கு தஞ்சாவூர் மாணவி தேர்வு

இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கு தஞ்சாவூர் மாணவி தேர்வு


UPDATED : மே 28, 2024 12:00 AM

ADDED : மே 28, 2024 09:07 AM

Google News

UPDATED : மே 28, 2024 12:00 AM ADDED : மே 28, 2024 09:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாதாக்கோட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் தமிழக ஹாக்கி வீரர் பாஸ்கரன். தாய் ராணி ஆசிரியை. இவர்களது இரண்டாவது மகள் பூர்ணிஷா, 19. இவர் தற்போது கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.டெக்., படிக்கிறார்.

பூர்ணிஷா இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி விளையாட்டு வீராங்கனையாக கடந்த 14 ஆண்டுகளாக பயிற்சி பெற்று, மாநில, தேசிய அளவிலும், ஆசிய அளவிலும் விளையாடி தங்கம், வெள்ளி, வெங்கலப் பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில் இத்தாலி நாட்டில் இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி உலகசாம்பியன்ஷீப் போட்டி வரும் செப்டம்பரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் விளையாட இந்திய அணி சார்பில் சீனியர் பெண்கள் பிரிவில் பஞ்சாப் அணி மூலம் தேர்வாகியுள்ளார்.

இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து பூர்ணிஷா கூறியதாவது:

14 ஆண்டுகளாக இன்லைன் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டியில் விளையாடி பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளேன். தமிழகம் சார்பில் இந்த விளையாட்டுக்கான அணி இல்லாத காரணத்தால், நான் பஞ்சாப் மாநில அணியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறேன்.

வரும் செப்டம்பர் மாதம் இத்தாலியில் நடைபெறும் உலக சாம்பியன்ஷீப் போட்டியில் கலந்துக்கொள்ள உள்ளேன். இதற்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், ஜூன் 10 முதல் 25ம் தேதி வரை நடைபெறுகிறது.

கடந்த 2021ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷீப் போட்டியின்போது கடைசி நேரத்தில் பங்கேற்க முடியாமல் போனது. இம்முறை தேர்வாகி இந்தியாவுக்காக வெற்றி வாகை சூடி வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us