sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அது போன மாசம்.. இப்போ இந்த மாசம்! கல்வி நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

/

அது போன மாசம்.. இப்போ இந்த மாசம்! கல்வி நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அது போன மாசம்.. இப்போ இந்த மாசம்! கல்வி நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அது போன மாசம்.. இப்போ இந்த மாசம்! கல்வி நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!


UPDATED : நவ 06, 2024 12:00 AM

ADDED : நவ 06, 2024 09:19 AM

Google News

UPDATED : நவ 06, 2024 12:00 AM ADDED : நவ 06, 2024 09:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:
திருச்சியில் உள்ள பிரபல கல்வி நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி கருமண்டபம், கோட்டை, தென்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், மெயின்கார்டு கேட் பகுதியில் இருக்கும் மகளிர் கல்லூரி ஒன்றுக்கும் இன்று அதிகாலையில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களுக்கு வெடிகுண்டு நிபுணர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். களத்தில் இறங்கிய அவர்கள், எங்கேனும் வெடிகுண்டு வைக்கப்பட்டனவா என தீவிர சோதனை நடத்தினர். சிறிதுநேர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 3 பள்ளிகள், ஒரு கல்லூரிக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. கடந்த மாதம் இதேபோன்று திருச்சி மாநகரில் இ-மெயில், கடிதம் மூலம் 3 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்போது மீண்டும் இதே பாணியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us