அரையாண்டு தேர்வு நிறைவு பள்ளிகளுக்கு 12 நாள் விடுமுறை
அரையாண்டு தேர்வு நிறைவு பள்ளிகளுக்கு 12 நாள் விடுமுறை
UPDATED : டிச 25, 2025 10:54 AM
ADDED : டிச 25, 2025 10:57 AM

கோவை:
அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வுகள் முடிந்து, ஜன. 4ம் தேதி வரை, 12 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. மூன்றாம் பருவ புத்தகங்களும் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது.
ஜன. 5ல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், மாணவ, மாணவியருக்கு, சென்னையில் இருந்து மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன. முதல் வகுப்புக்கு, 8,690, இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு முறையே, 9,688 மற்றும், 9,643. 4 - 11 ஆயிரத்து, 261, 5 - 12 ஆயிரத்து, 324, 6 - 5,202, 7 - 5,445 என மொத்தம், 62 ஆயிரத்து, 253 புத்தகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.
அனைத்து பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, பள்ளி திறக்கும் நாளில், மாணவ, மாணவியருக்கு தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர் மூலம் வழங்கப்படுமென, தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

