sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடம் காலி என்பதே இருக்காது: அமைச்சர்

/

அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடம் காலி என்பதே இருக்காது: அமைச்சர்

அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடம் காலி என்பதே இருக்காது: அமைச்சர்

அரசு மருத்துவமனைகளில் டாக்டர் பணியிடம் காலி என்பதே இருக்காது: அமைச்சர்


UPDATED : பிப் 18, 2025 12:00 AM

ADDED : பிப் 18, 2025 05:03 PM

Google News

UPDATED : பிப் 18, 2025 12:00 AM ADDED : பிப் 18, 2025 05:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழகத்தில், 2,642 டாக்டர்கள் பணியிடங்கள், இன்னும், 10 நாட்களில் நிரப்பப்படும். அதன்பின் காலி பணியிடம் என்ற நிலையே இருக்காது என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியர் உயர் வகுப்புகளுக்கு செல்வதற்காக, 8 லட்சம் பேருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

அரசு பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளதால், கல்வித்திறன் உயர்ந்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் அரசு பள்ளிகளின் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர்ந்து வருகிறது.

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 2,642 டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதற்காக விண்ணப்பித்த, 4,585 டாக்டர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி முடிந்துள்ளது. அதில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணியாற்ற விருப்புள்ள இடங்களுக்கான பொது கலந்தாய்வு நடத்தப்படும்.

பின், 2,642 டாக்டர்களுக்கு இன்னும், 10 நாட்களில் பணி ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்படும். அதன்பின், அடுத்த பல ஆண்டுகளுக்கு அரசு மருத்துவமனைகளில், டாக்டர்கள் காலிப்பணியிடங்கள் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.







      Dinamalar
      Follow us