sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இந்தாண்டும் ஓ.எம்.ஆர்., முறையிலேயே நீட் தேர்வு!

/

இந்தாண்டும் ஓ.எம்.ஆர்., முறையிலேயே நீட் தேர்வு!

இந்தாண்டும் ஓ.எம்.ஆர்., முறையிலேயே நீட் தேர்வு!

இந்தாண்டும் ஓ.எம்.ஆர்., முறையிலேயே நீட் தேர்வு!


UPDATED : ஜன 18, 2025 12:00 AM

ADDED : ஜன 18, 2025 09:48 PM

Google News

UPDATED : ஜன 18, 2025 12:00 AM ADDED : ஜன 18, 2025 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இந்தாண்டும் ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் பேனாவால் குறிக்கும் வகையிலேயே நடக்கும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, நீட் எனப்படும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வுகளை நடத்துகிறது.

இந்த தேர்வு, பேனா,- பேப்பர் முறையில் தற்போது நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த தேர்வில் இதுவரை இல்லாத அளவு 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இந்த தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சர்ச்சை எழுந்தது. மேலும், தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கல்வி அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் நீட் தேர்வை ஆன்லைன் முறையில் நடத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தின. அதில், ஒரே நாளில், ஒரே ஷிப்டில் வழக்கமான ஓ.எம்.ஆர்., தாளில் பேனாவால் விடையை குறிக்கும் முறையிலேயே தேர்வு நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டதாக, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.







      Dinamalar
      Follow us