sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கடல் ஆமை பிரேத பரிசோதனை கால்நடை டாக்டர்களுக்கு பயிற்சி

/

கடல் ஆமை பிரேத பரிசோதனை கால்நடை டாக்டர்களுக்கு பயிற்சி

கடல் ஆமை பிரேத பரிசோதனை கால்நடை டாக்டர்களுக்கு பயிற்சி

கடல் ஆமை பிரேத பரிசோதனை கால்நடை டாக்டர்களுக்கு பயிற்சி


UPDATED : ஜன 08, 2026 03:50 PM

ADDED : ஜன 08, 2026 03:51 PM

Google News

UPDATED : ஜன 08, 2026 03:50 PM ADDED : ஜன 08, 2026 03:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வண்டலுார்:
வண்டலுாரில் இயங்கி வரும் வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் சார்பில், உயிரிழந்த கடல் ஆமைகளின் உடலை பிரேத பரிசோதனை செய்வது குறித்த பயிற்சி, நேற்று நடத்தப்பட்டது.

வண்டலுார் - கேளம்பாக்கம் சாலையில், தமிழக அரசின் வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, தமிழக காடுகள், மலைகள், கடல் உள்ளிட்ட இயற்கை வளங்களில் வாழும் உயிரினங்கள் இறந்தால், அவற்றின் உடலை பிரேத பரிசோதனை செய்து, இறப்பிற்கான காரணம் கண்டறியப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தின் கடலோர பகுதிகளில் பணியாற்றும் கள கால்நடை மருத்துவர்களுக்கு, கடல் ஆமையை கையாளுதல் மற்றும் உடற்கூறு பரிசோதனை செய்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி, நேற்று நடத்தப்பட்டது. இதில், தமிழக கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 17 கால்நடை மருத்துவர்கள் பங்கேற்றனர்.

கடலிலிருந்து கரை ஒதுங்கி மரணமடையும் ஆமைகளின் உடலை திறம்பட கையாளுதல் மற்றும் அவற்றின் மரணத்திற்கான காரணம் கண்டறிதல் குறித்து, இம்முகாமில் செயல் முறை பயிற்சி அளிக்கப்பட்டது.







      Dinamalar
      Follow us