UPDATED : ஜன 20, 2026 12:22 PM
ADDED : ஜன 20, 2026 12:23 PM
விருத்தாசலம்:
மங்களூர் அடுத்த வடகரம்பூண்டி கிராமத்தில், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், எண்ணெய்வித்து பயிர்களில் மேம்படுத்தப்பட்ட விதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.
திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கி, எண்ணெய்வித்து பயிர்களில் சாகுபடி தொழில்நுட்பங்கள், புதிய ரங்கள், விதைநேர்த்தி, உயிர் உரங்கள், நோய் எதிர் உயிர் கொல்லி விதைநேர்த்தி, களை நிர்வாகம், ஜிப்சம் மற்றும் மண் அணைத்தல் பயன்பாடு, வேம்பு பொருட்கள் கொண்டு பூச்சிநோய் பாதுகாப்பு குறித்து விளக்கினார்.
வேளாண் துறை விரிவாக்க அலுவலர்கள், ஆத்மா அலுவலர்களுடன் இணைந்து வயல் விழாக்கள் நடத்தி பல்வேறு பயிர்களில் அங்கக வேளாண் சான்றளிப்பு, விதை உற்பத்தி மற்றும் மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

