sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பழங்குடியின மாணவர்கள் இடங்களை கல்லுாரிகளில் நிரப்ப வலியுறுத்தல்

/

பழங்குடியின மாணவர்கள் இடங்களை கல்லுாரிகளில் நிரப்ப வலியுறுத்தல்

பழங்குடியின மாணவர்கள் இடங்களை கல்லுாரிகளில் நிரப்ப வலியுறுத்தல்

பழங்குடியின மாணவர்கள் இடங்களை கல்லுாரிகளில் நிரப்ப வலியுறுத்தல்


UPDATED : மே 20, 2024 12:00 AM

ADDED : மே 20, 2024 09:59 AM

Google News

UPDATED : மே 20, 2024 12:00 AM ADDED : மே 20, 2024 09:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
கல்லுாரிகளில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில், பழங்குடி இனத்தவருக்கு உரிய மொத்த இடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சண்முகம், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
அனைத்து மாவட்டங்களிலும், பழங்குடியினர் பரவலாக வாழ்ந்து வந்தாலும், சேலம், திருவண்ணாமலை, நீலகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கடலுார், விழுப்புரம், வேலுார், திருப்பத்துார், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தான் அதிகம் வசித்து வருகின்றனர்.

கல்வித்துறைக்கு அரசு செலுத்திய சிறப்பு கவனம் காரணமாகவும், மாணவர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படுவதாலும், பழங்குடி மாணவர்கள் மத்தியில், விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில், அரசு உண்டு உறைவிட பள்ளிகளில் மட்டும் தேர்வு எழுதிய, 1,245 மாணவர்களில் 1,171 பேர் வெற்றி பெற்றுள்ளனர். எட்டு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

இது தவிர, இதர அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், தேர்ச்சி பெற்ற மாணவர்களை கணக்கில் கொண்டால், அதிகப்படியான மாணவர்கள், உயர்கல்வி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு கலை கல்லுாரிகளில் உள்ள, பழங்குடி மாணவர்களுக்கான இடங்கள் 1,200. அதிலும் பல பாடப்பிரிவுகளில், 50 இடங்களுக்கு மேல் இருந்தால் தான், ஒரு இடம் பழங்குடியினருக்கு கிடைக்கும்.

இதற்கு குறைவான இடங்கள் உள்ள பாடப்பிரிவுகளில், பழங்குடியின மாணவர் சேரவே முடியாது. எனவே, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், தமிழக அளவில் பழங்குடியினத்தவருக்கு உரிய மொத்த இடங்களும் நிரப்பப்படுவது அவசியம்.

அதற்கு, பழங்குடி மாணவர்களிடம் இருந்து அதிக விண்ணப்பங்கள் வரும் கல்லுாரிகளுக்கு, போதுமான விண்ணப்பங்கள் வராத கல்லுாரிகளுக்கான இடங்களையும் அளித்து, கூடுதல் பழங்குடி மாணவர்கள், பட்டப்படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்பை உருவாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us