UPDATED : அக் 08, 2024 12:00 AM
ADDED : அக் 08, 2024 08:25 AM
திருப்பூர்:
பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற அறிவியல் நாடகப் போட்டியில் ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் நாடகம் முதலிடம் பெற்றது.
இந்த நாடகம் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றது. மாநில அளவிலான போட்டி திருநெல்வேலியில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் இன்று நடக்கிறது. மாநில போட்டியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ-, மாணவிகளை பள்ளித் தலைவர் தியாகராஜன், செயலாளர் செந்தில்நாதன், தாளாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் சந்திரசேகர், நிர்வாக குழு உறுப்பினர் பெரியசாமி உள்பட அனைத்து நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்தினர். இப்பள்ளி மாணவர்களின் அறிவியல் நாடகம் மாவட்ட அளவில் 9 முறை தேர்வு பெற்றுள்ளது. மாநில அளவில் கலந்து கொண்டதுடன், தென்னிந்திய அளவிலான போட்டிகளில் 3 முறை பங்கு பெற்று பெருமை சேர்த்துள்ளது.