UPDATED : அக் 24, 2024 12:00 AM
ADDED : அக் 24, 2024 06:28 PM
பாலக்காடு:
பாலக்காடு, தமிழ் கலாசார மையம் சார்பில், தமிழ், ஆங்கில கவிஞரும், எழுத்தாளருமான வானவில் ரவியின், எழுத்து உலகம் குறித்து, பாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரியில் நேற்று பயிலரங்கம் நடந்தது.
பயிலரங்கத்தை மலையாள திரைப்பட பாடலாசிரியர் ராஜீவ் ஆலும்கள் துவக்கி வைத்தார். தமிழ் கலாசார மைய இயக்குனர் ராஜாராம் தலைமை வகித்தார். வானவில் ரவி ஏற்பு உரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் (பொறுப்பு) நஜீப், துணை முதல்வர் சிந்து, தமிழ் துறை தலைவர் சுஜானா பானு, முன்னாள் தலைவர் சமுத்திரபாண்டியன், பாலக்காடு டி.ஜி.எம்., தம்பிரான், தமிழ் கலை மன்ற செயலாளர் மாதவன் உள்ளிட்டோர் பேசினர்.
உச்ச நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வக்கீலுமான வானவில் ரவியின், எழுத்துக்கள் குறித்து, கடந்த 2015 முதல் இதுவரை 123 பயிலரங்கம், பாலக்காடு தமிழ் கலாசார மையம் சார்பில் நடத்தப்பட்டது.