sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

வாகன உதிரி பாகங்களை இனி மூங்கிலில் செய்யலாம் குவஹாத்தி ஐ.ஐ.டி.,யினர் அசத்தல்

/

வாகன உதிரி பாகங்களை இனி மூங்கிலில் செய்யலாம் குவஹாத்தி ஐ.ஐ.டி.,யினர் அசத்தல்

வாகன உதிரி பாகங்களை இனி மூங்கிலில் செய்யலாம் குவஹாத்தி ஐ.ஐ.டி.,யினர் அசத்தல்

வாகன உதிரி பாகங்களை இனி மூங்கிலில் செய்யலாம் குவஹாத்தி ஐ.ஐ.டி.,யினர் அசத்தல்


UPDATED : ஜூலை 25, 2025 12:00 AM

ADDED : ஜூலை 25, 2025 12:45 PM

Google News

UPDATED : ஜூலை 25, 2025 12:00 AM ADDED : ஜூலை 25, 2025 12:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவஹாத்தி:
பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற இந்திய மூங்கில் ரகத்தைப் பயன்படுத்தி, அதிக திறன் உடைய வாகன உதிரிபாகங்களை உருவாக்கி, அசாமின் குவஹாத்தி ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

வாகனங்களின் உட்புற வடிவமைப்புகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக, நான்கு வித மூங்கில்களின் கலவையை, உயிரி அல்லது பெட்ரோலியம் அடிப்படையிலான பசைப்பொருளுடன் சேர்த்து, வேதியியல் வினைபுரிந்ததில் பாலிமர் போன்ற மூலப் பொருள் உருவாக்கப்பட்டது.

அதை பயன்படுத்தி, வாகன உதிரிபாகங்களை ஐ.ஐ.டி., ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். வாகனங்களின் டேஷ்போர்டு, டோர் பேனல் மற்றும் சீட் பின்புறம் உள்ளிட்டவற்றில் இதை பயன்படுத்தலாம்.

கிட்டத்தட்ட 17 விதமான தரப்பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அதிக வலிமை, உயர் வெப்பநிலையில் தாக்குப்பிடித்தல், குறைந்தளவு ஈரப்பதத்தை தக்க வைத்தல் ஆகியவற்றோடு, மிக குறைந்த விலையில் தயாரிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us