அறிஞர் அண்ணா அரசு கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அறிஞர் அண்ணா அரசு கல்லுாரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
UPDATED : மார் 20, 2026 02:59 PM
ADDED : மார் 20, 2026 03:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்:
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் சட்டசபை தேர்தலையொட்டி, நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு அடையும் வகையில், ஓட்டளிப்பதன் அவசியம் குறித்தும், பொதுமக்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் ஓட்டளிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில், உதவி ஆட்சியர் (பயிற்சி) வெங்கடேஷ்வரன், துணை ஆட்சியர் (பயிற்சி) கதிர்செல்வி, கல்லுாரி முதல்வர் சிவக்குமார் உட்பட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

