வி.வி.வி., பெண்கள் கல்லுாரிக்கு ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரம்
வி.வி.வி., பெண்கள் கல்லுாரிக்கு ஏ பிளஸ் பிளஸ் அங்கீகாரம்
UPDATED : ஏப் 24, 2024 12:00 AM
ADDED : ஏப் 24, 2024 10:25 AM
விருதுநகர்:
விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரிக்கு தேசிய மதிப்பீடு அங்கீகார கவுன்சில் ஏ பிளஸ் பிளஸ் என்ற உயர்தர அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இது குறித்து கல்லுாரி செயலாளர் கோவிந்தராஜபெருமாள் கூறியதாவது:
22 இளநிலை, 15 முதுநிலை பாடங்கள் உள்ளன. ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், கணிதம், உயிர்வேதியியல், தமிழ் ஆகிய துறைகள் ஆராய்ச்சி மையங்களாக செயல்பட்டு வருகின்றன.
2009ம் ஆண்டில் தன்னாட்சி உரிமம் பெற்றது. 2004ம் ஆண்டில் தேசிய தர மதிப்பீட்டு குழுவினரின் ஆய்வில் ஏ அந்தஸ்து பெற்றது. 2010ம் ஆண்டு 2வது சுழற்சியிலும், 2018ம் ஆண்டு 3வது சுழற்சியிலும் தொடர்ந்து ஏ அந்தஸ்தை தக்க வைத்துள்ளது.
தற்போது நான்காவது சுழற்சியில் ஏ பிளஸ் பிளஸ் என்ற உயர்தர அங்கீகாரத்தை பெற்றுள்ளது. என்றார்.கல்லுாரி புரவலர் மகேந்திரன், தலைவர் பழனிச்சாமி, உப தலைவர் சிவபால ஈஸ்வரி, கூட்டுச்செயலாளர் லதா, பொருளாளர் ரவிசங்கர், முதல்வர் மீனா ராணி ஆகியோர் பாராட்டினர்.