sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இனி அனைத்து வகை பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டம் கட்டாயம்

/

இனி அனைத்து வகை பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டம் கட்டாயம்

இனி அனைத்து வகை பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டம் கட்டாயம்

இனி அனைத்து வகை பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டம் கட்டாயம்


UPDATED : ஜூலை 04, 2025 12:00 AM

ADDED : ஜூலை 04, 2025 09:27 AM

Google News

UPDATED : ஜூலை 04, 2025 12:00 AM ADDED : ஜூலை 04, 2025 09:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்கும் வகையில், அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட்ட வாட்டர் பெல் திட்டம், தற்போது அனைத்து வகை பள்ளிகளிலும் நடைமுறைக்கு வருகிறது.

வகுப்பு நேரத்தில் மாணவர்கள் சரிவர தண்ணீர் பருகாமல் இருப்பதால், பல்வேறு உடல் நலன் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் தற்போது செயல்படுகிறது.

இதன்படி, காலை 11:00 மணி, மதியம் 1:00 மணி மற்றும் பிற்பகல் 3:00 மணிக்கு 'பெல்' அடிக்க வேண்டும்; அப்போது மாணவ மாணவியர் தண்ணீர் குடிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், அமல்படுத்தப்பட்டு வந்த இத்திட்டத்தை, மாணவர்களின் நலன் கருதி தனியார் பள்ளி களிலும் விரிவுபடுத்த வேண்டும் என, பெற்றோர் தரப்பில் இருந்து, கோரிக்கைகள் எழுந்ததைத் தொடர்ந்து, தற்போது அனைத்து தனியார் பள்ளிகளும் இந்த திட்டத்தை அமல்படுத்துவது கட்டாயம் என, தனியார் பள்ளிகள் பிரிவின் இயக்குனர் அரசாணை வெளியிட்டுள்ளார்.

தனியார் மெட்ரிக் பள்ளிகள் மட்டுமல்லாது, சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எனவே, அரசு பள்ளிகள் மட்டுமல்லாது, இனி அனைத்து வகை பள்ளிகளிலும், வாட்டர் பெல் திட்டம் நடைமுறைக்கு வருகிறது என தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் கூறினார்.






      Dinamalar
      Follow us