sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பாலியல் துன்புறுத்தலை தடுக்க பெற்றோர் செய்ய வேண்டியதென்ன?

/

பாலியல் துன்புறுத்தலை தடுக்க பெற்றோர் செய்ய வேண்டியதென்ன?

பாலியல் துன்புறுத்தலை தடுக்க பெற்றோர் செய்ய வேண்டியதென்ன?

பாலியல் துன்புறுத்தலை தடுக்க பெற்றோர் செய்ய வேண்டியதென்ன?


UPDATED : ஏப் 01, 2025 12:00 AM

ADDED : ஏப் 01, 2025 08:13 AM

Google News

UPDATED : ஏப் 01, 2025 12:00 AM ADDED : ஏப் 01, 2025 08:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவை பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

இதில் பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் நஸ்ரின் பேசியதாவது:



ஆண், பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அதனை தடுக்கும் சட்டங்கள் பற்றியும் பெற்றோர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகள் முன்பு சண்டை போடக்கூடாது. குழந்தைகளிடம் தினமும் அரை மணி நேரமாவது பேச வேண்டும்.

மாலையில் குழந்தைகளிடம், காலையிலிருந்து பள்ளி வேலை நேரத்தில் என்னென்ன நடந்தது யாரிடம் என்ன பேசினாய், வழியில் யாரைப் பார்த்தாய் என்பது பற்றி கேட்பது அவசியம். குழந்தைகள் முன்பின் தெரியாத நபர்களிடம், கவனமுடன் பழக வேண்டும் என, சொல்லிக்கொடுக்க வேண்டும்.

ஏதேனும் தின்பண்டமோ, பொருட்களோ கொடுத்து, தொட்டு பேசினால் உடனே பெற்றோர்களிடமோ, ஆசிரியரிடமோ கூறுமாறு குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் மொபைல் போனில் யாரிடம் பேசுகிறார்கள், என்னென்ன பார்க்கிறார்கள் என்றும் கவனிக்க வேண்டும். பாலியல் குற்றங்கள் குறித்து, ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

வட்டார கல்வி அலுவலர் ரமேஷ்பாபு, கவுன்சிலர் அம்பிகா தனபால், பள்ளி தலைமை ஆசிரியர் சகுந்தலா மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us