sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஒரு மொழி எப்போது அழியும்.. நுால் அறிமுக விழாவில் விளக்கம்

/

ஒரு மொழி எப்போது அழியும்.. நுால் அறிமுக விழாவில் விளக்கம்

ஒரு மொழி எப்போது அழியும்.. நுால் அறிமுக விழாவில் விளக்கம்

ஒரு மொழி எப்போது அழியும்.. நுால் அறிமுக விழாவில் விளக்கம்


UPDATED : செப் 10, 2025 12:00 AM

ADDED : செப் 10, 2025 08:54 AM

Google News

UPDATED : செப் 10, 2025 12:00 AM ADDED : செப் 10, 2025 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில்,நுால்கள் அறிமுக விழா, தாமஸ் கிளப் அரங்கில் நேற்று நடந்தது. புலவர் பானுமதி தலைமை வகித்தார்.

கவிஞர் முத்தையா மோகன் எழுதிய, 'நதிகளைத் தேடும் மழை' கவிதை நுால், எழுத்தாளர் மன்ற மணவாளன் எழுதிய, 'பின் வரிசையில் அமர்ந்து இருப்பவர்கள்' என்ற கட்டுரை நுால் அறிமுகம் செய்யப்பட்டது.

நுால் குறித்து, பேராசிரியர் மணிமேகலை பேசியதாவது:


எழுத்தாளர் மன்றவாணன், தமிழ்மொழி மீது உள்ள பற்று காரணமாக இந்த நுாலை எழுதி இருக்கிறார்.மக்கள் பேசும் மொழி கல்வி மொழியாகவும், அலுவல் மொழியாகவும், வழிபாட்டு மொழியாகவும் இல்லாமல் போனால், அந்த மொழி அழிந்து போகும்.

நாம் பேசும் மொழி, எழுதும் தமிழ்மொழி, பிழையில்லாமல் இருக்க வேண்டும். எழுத்தாளர்கள், கவிஞர்கள் புத்தகங்கள் எழுதும் முன், நிறைய புத்தகங்களை படிக்க வேண்டும். அப்போதுதான் புதிய கருத்துக்கள் படைப்புகளில் வெளிப்படும் என்பதை, இந்த நுால் வலியுறுத்துகிறது.

இவ்வாறு, அவர் பேசினார்.

கவிஞர்கள் செங்குட்டுவன், கரீம், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ்குமார், இளங்கோவன் மற்றும் ரங்காநாதன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.






      Dinamalar
      Follow us