UPDATED : டிச 21, 2024 12:00 AM
ADDED : டிச 21, 2024 11:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பத்தாம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க நேற்று வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தத்கல் முறையில் விண்ணப்பிக்க டிச., 26 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அரசுத் தேர்வு இயக்ககத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000 (11,12ம் வகுப்பு) மற்றும் ரூ.500 (10ம் வகுப்பு) செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.