sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மனதை கட்டுப்படுத்தாமல் மகத்தான மனிதராக முடியாது

மனதை கட்டுப்படுத்தாமல் மகத்தான மனிதராக முடியாது

மனதை கட்டுப்படுத்தாமல் மகத்தான மனிதராக முடியாது


UPDATED : மே 07, 2025 12:00 AM

ADDED : மே 07, 2025 07:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 07, 2025 12:00 AM ADDED : மே 07, 2025 07:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோவை அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனர் அவினாசிலிங்கத்தின், 122வது பிறந்த தின விழா, பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது.

விழாவில், மகாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:


அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று, பெண் கல்வி மறுக்கப்பட்ட காலத்தில் பெண் கல்விக்காக, சாரதாலயத்தை நிறுவி கல்வி வழங்கியவர் அவினாசிலிங்கம்.

அரசியலை அறமாகப் பார்த்தவர். ஆன்மிகத்தோடு கூடிய கல்வியை வழங்கினார். கல்வி நன்னெறி கல்வியாகவும், பண்பாட்டு கல்வியாகவும் அமைய வேண்டும். தனிமனித ஒழுக்கத்தை கடைபிடித்தால், வாழ்வின் பல துன்பங்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை பிறக்கும்.

இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். மனதை கட்டுப்படுத்தாமல், மகத்தான மனிதராக முடியாது. எடுத்துக் கொண்ட செயலை முழுமையாக முடிப்பவர்கள் மட்டுமே வெற்றி அடைவர்.

இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னதாக, பல்கலையின் துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் வரவேற்றார். வேந்தர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார்.

ஸ்ரீ அவினாசிலிங்கம் கல்வி அறக்கட்டளை நிறுவனங்களின் வாழ்நாள் அறங்காவலர் குழந்தைவேல், பல்கலை பதிவாளர் இந்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us