sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஈரான் தாக்குதலில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு

/

ஈரான் தாக்குதலில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு

ஈரான் தாக்குதலில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு

ஈரான் தாக்குதலில் மேலும் 2 இந்தியர்கள் உயிரிழப்பு

1


ADDED : மார் 05, 2026 12:15 PM

Google News

1

ADDED : மார் 05, 2026 12:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஸ்கட்: ஹார்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த டேங்கர் கப்பலில் ஈரான் நடத்திய தாக்குதலில், மேலும் 2 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சவுதி அரேபியா, யுஏஇ, கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும், எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடியது. இந்த வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

அந்த வகையில், கடந்த மார்ச் 1ம் தேதி ஈரானுக்கும், ஓமனுக்கும் இடையே உள்ள ஹார்முஸ் ஜலசந்தியில், சென்று கொண்டிருந்த டேங்கர் கப்பல் மீது வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டிரோன் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதில், 3 இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும், கேப்டன் அஷிஷ்குமார் உள்பட இரு இந்தியர்கள் காணாமல் போகினர்.

இந்த நிலையில், காணாமல் போன அஷிஷ்குமார் உள்பட இருவரும் தற்போது உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழலால், இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உதவி எண்களும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us