தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ஏஐ வளர்ச்சி ஜெட் வேகத்தில் பறக்கிறது; மைக்ரோசாப்ட் சத்யா நாதெள்ளா திட்டவட்டம்

ஏஐ வளர்ச்சி ஜெட் வேகத்தில் பறக்கிறது; மைக்ரோசாப்ட் சத்யா நாதெள்ளா திட்டவட்டம்

ஏஐ வளர்ச்சி ஜெட் வேகத்தில் பறக்கிறது; மைக்ரோசாப்ட் சத்யா நாதெள்ளா திட்டவட்டம்

2


ADDED : செப் 14, 2026 08:31 AM

Follow on GoogleFavourite on Google

2

ADDED : செப் 14, 2026 08:31 AM


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்: 'செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகம் குறைந்துவிட்டதாகக் கிளம்பும் வதந்திகளில் துளியும் உண்மையில்லை; அது தன் முழு வீச்சில் முன்னேறி வருகிறது,' என மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் சத்யா நாதெள்ளா அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

​சமீபகாலமாக டெக் உலகில், ஏஐ மாடல்களின் வளர்ச்சி ஒரு தேக்கநிலையை எட்டிவிட்டது என்றும், இதற்குமேல் அசுர வளர்ச்சி சாத்தியமில்லை என்றும் விவாதம் நடந்து வருகிறது. ஆந்த்ரோபிக், எலான் மஸ்க் மற்றும் சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் நகர்வுகளை முன்வைத்து இத்தகைய சலசலப்புகள் எழுந்தன.​

வாதங்களை தகர்த்த நாதெள்ளா:


இவ்விவகாரம் குறித்துப் பேசிய சத்யா நாதெள்ளா, தேக்கநிலை என்ற கருத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஏஐ தொழில்நுட்பத்தின் 'ஸ்கேலிங் லாஸ்' எனப்படும் ஆற்றல் விரிவாக்கம் தொடர்ந்து சீராகவே இயங்கி வருகிறது.

வெறும் மாடல்களை உருவாக்குவதோடு நிற்காமல், தர்க்கரீதியான சிந்தனை, ஏஜெண்டிக் ஏஐ மற்றும் நிஜ உலக வணிகப் பயன்பாடுகளில் இது அடுத்தகட்டத்தை நோக்கி நகர்கிறது. அடுத்த தலைமுறை தொழில்நுட்பக் கட்டமைப்புகளுக்கு மைக்ரோசாப்ட் தங்கு தடையின்றி ஆதரவளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

​ஏஐ தடம் மாறுகிறது என அவநம்பிக்கை பேசியவர்களுக்கு, சத்யா நாதெள்ளாவின் இந்தத் தீர்க்கமான பதில், டெக் வட்டாரத்தில் புது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us