sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2028க்குள் 'ஏர் டாக்சி' சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு

/

2028க்குள் 'ஏர் டாக்சி' சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு

2028க்குள் 'ஏர் டாக்சி' சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு

2028க்குள் 'ஏர் டாக்சி' சேவை; தனியார் நிறுவனம் அறிவிப்பு

8


ADDED : டிச 23, 2025 01:38 AM

Google News

8

ADDED : டிச 23, 2025 01:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: நம் நாட்டில் விரைவில், எலக்ட்ரிக் விமான டாக்ஸி சேவைகள் துவங்கவுள்ளன. அதற்கான கள சோதனைகள் நடந்து வருவதாக விண்வெளித் துறை சார்ந்த, 'ஸ்டார்ட்அப்' நிறுவனமான, 'சரளா ஏவியேஷன்' அறிவித்துள்ளது.

இருசக்கர வாகனங்களை போல, வருங்காலத்தில் வான் வழியே பயணிக்கும், 'ஏர் டாக்சி' சேவைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சியில், சர்வதேச நிறுவனங்கள் களமிறங்கி இருக்கின்றன.

அந்நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில், கர்நாடகாவின் பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான, 'சரளா ஏவியேஷன்' 'எலக்ட்ரிக் ஏர் டாக்சி'களை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.

வரும், 2028க்குள் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜனவரியில், டில்லியில் நடந்த கண்காட்சியின் போது, 'சூன்யா' என்ற ஏர் டாக்ஸி மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்தது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:


அடுத்த தலைமுறை விமான சேவைகளை மேம்படுத்தும் நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது. பெங்களூருவில் உள்ள சோதனை மையத்தில், 'எலக்ட்ரிக் வெர்டிகல் டேக் ஆப் - லேண்டிங்' எனப்படும், தரையில் இருந்தபடி அப்படியே மேலெழும்புவது, தரையிறங்குவதற்கான கள சோதனைகள் நடந்து வருகின்றன.

கடந்த ஒன்பது மாதத்தில் இத்திட்டம் மிக முக்கிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. பொறியியல் அளவு, செயல்படுத்தும் வேகம் ஆகிய சோதனைகள் திருப்திகரமாக அமைந்து இருக்கின்றன.

எஸ்.ஒய்.எல்.எக்ஸ்.,-1 என பெயரிடப்பட்ட இந்த தனியார் ஏர் டாக்ஸி அதிநவீனமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தளம் அமைக்க அதானி திட்டம்

மஹாராஷ்டிராவின் நவி மும்பையில், 'ஏர் டாக்சி'களுக்கான தளம் அமைக்க, 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தரும்படி நகர மற்றும் தொழில் மேம்பாட்டு கழகமான, 'சிட்கோ'விடம் அதானி குழுமம் அனுமதி கோரியுள்ளது. ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏர் டாக்சிகள் மூலம் பயணியருக்கு சேவை அளிக்கும் வகையில், அந்த நிலத்தில் தளம் அமைக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. புனே மற்றும் மும்பையை இணைக்கும் வகையில், நவி மும்பை பகுதியை அதானி குழுமம் தேர்ந்தெடுத்துள்ளது.








      Dinamalar
      Follow us