sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பரிந்துரை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து வழங்க தடை! ம.பி., சோகத்தை அடுத்து கேரள அரசு அதிரடி உத்தரவு

/

பரிந்துரை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து வழங்க தடை! ம.பி., சோகத்தை அடுத்து கேரள அரசு அதிரடி உத்தரவு

பரிந்துரை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து வழங்க தடை! ம.பி., சோகத்தை அடுத்து கேரள அரசு அதிரடி உத்தரவு

பரிந்துரை இல்லாமல் குழந்தைகளுக்கு மருந்து வழங்க தடை! ம.பி., சோகத்தை அடுத்து கேரள அரசு அதிரடி உத்தரவு


ADDED : அக் 07, 2025 02:59 AM

Google News

ADDED : அக் 07, 2025 02:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம் : மத்திய பிரதேசத்தில், இருமல் மருந்து குடித்து 14 குழந்தைகள் பலியானதை அடுத்து, கேரளாவில், 'டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த மருந்தும் கொடுக்கக் கூடாது' என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மற்றும் பெதுல் மாவட்டங்களில், கடந்த மாத இறுதியில், 1 - 6 வயது வரையிலான 12 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தன.

இதற்கு, குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்ட, 'கோல்ட்ரிப்' மற்றும் 'நெக்ஸ்டரா' இருமல் மருந்துகளே காரணம் என தெரியவந்தது. ராஜஸ்தானில், இதேபோல் இரு குழந்தைகள்உயிரிழந்தன.

இதையடுத்து, மருந்து கலப்பட விவகாரத்தில், மருந்து நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட்ட அரசு கட்டுப்பாட்டாளர் கைது செய்யப்பட்டார்.

பரிந்துரை


சீட்டு மத்திய பிரதேசத்தில், 'கோல்ட்ரிப்' மருந்தை பரிந்துரைத்த டாக்டர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார். இரண்டு மருந்து ஆய்வாளர்கள், உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் துணை இயக்குநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இரு மாநிலங்களிலும், 'கோல்ட்ரிப்' மருந்தை, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளாவிலும், 'கோல்ட்ரிப்' மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளாவில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் எந்த மருந்தையும் தரக் கூடாது என, மாநில சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.

ம.பி., குழந்தைகள் இறப்பை அடுத்து, கேரளாவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார அதிகாரிகள், டாக்டர்கள் உள்ளிட்டோர் பங்கற்ற உயர்மட்ட கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற சுகாதார துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது:


கேரளாவில், இருமல் மருந்து குடித்து குழந்தைகள் யாரும் இறக்கவில்லை. இருப்பினும், அது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை, 52 இருமல் மருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அறிவுறுத்தல் தடை செய்யப்பட்ட, 'கோல்ட்ரிப்' மருந்தை தயாரித்த நிறுவனத்தின் பிற மருந்துகளையும் தடை செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில், இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படும்.

குறிப்பாக, குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் இருமல் மருந்தின் தரத்தை ஆய்வு செய்ய மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, குழந்தைகளின் இருமல் மருந்து பயன்பாடு குறித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க முடியும். அதேசமயம், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இன்றி, எந்த மருந்தும் வழங்கக் கூடாது என, மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான மருந்துகள் அவர்களின் உடல் எடைக்கு ஏற்ப பரிந்துரைக்கப்படுவதால், ஒரு குழந்தைக்கு வழங்கப்படும் மருந்து மற்றொரு குழந்தைக்கு வழங்கப்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே வழங்கிய சீட்டுக்கு, மீண்டும் மீண்டும் மருந்து வழங்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து கட்டுப்பாட்டு துறை சார்பில், மாநிலம் முழுதும் மருந்து கடைகளில் ஆய்வு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடகாவிலும் தடை

கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின், 'ஸ்ரீசன் பார்மா' நிறுவன தயாரிப்பான, 'கோல்ட்ரிப்'; ராஜஸ்தானின், 'கேசன்ஸ் பார்மா' நிறுவனத்தின் 'டெக்ட்ரோ மெத்ரோபன் ஹைட்ரோபுரோமைட்' ஆகியவற்றை வாங்கவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகள், மருத்துவமனை நிர்வாகிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இந்த இரு மருந்துகளின் இருப்பு இருந்தால், அது குறித்து, உதவி மருந்து கட்டுப்பாட்டாளர் அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.



மருந்து நிறுவனம் மீது

நடவடிக்கை எடுக்காதது ஏன்?

இருமல் மருந்து குடித்து குழந்தைகள் இறந்த விவகாரத்தில், 'கோல்ட்ரிப்' மருந்தை பரிந்துரைத்த மத்திய பிர தேச டாக்டர் பிரதீப் சோனி கைது செய்யப்பட்டதற்கு இந்திய மருத்துவ கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: இருமல் மருந்தை பரிந்துரைத்த டாக்டரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. பிரச்னைக்குள்ளான மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? குழந்தைகள் இறப்பு குறித்து விசாரிக்க உண்மை கண்டறியும் குழு, ம.பி.,க்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார அமைச்சகத்திடம் முறையிட முடிவு செய்யப்பட்டு ள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us