sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அணு ஆயுத சோதனை செய்யவில்லை; அமெரிக்கா புகாருக்கு சீனா மறுப்பு

/

அணு ஆயுத சோதனை செய்யவில்லை; அமெரிக்கா புகாருக்கு சீனா மறுப்பு

அணு ஆயுத சோதனை செய்யவில்லை; அமெரிக்கா புகாருக்கு சீனா மறுப்பு

அணு ஆயுத சோதனை செய்யவில்லை; அமெரிக்கா புகாருக்கு சீனா மறுப்பு

3


ADDED : நவ 04, 2025 06:48 AM

Google News

3

ADDED : நவ 04, 2025 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீஜிங்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டி ஒன்றில், சீனா உள்ளிட்ட நாடுகள் பூமிக்கடியில் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக தெரிவித்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

இதுகுறித்து, சீன வெளியுறவுத்துறை நேற்று வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:


சீனா ஒரு பொறுப்பான அணு ஆயுத நாடாகும். அணு ஆயுதங்களை 'முதலில் பயன்படுத்த மாட்டேன்' என்ற தன் நீண்டகால கொள்கையில் சீனா உறுதியாக உள்ளது.

எந்த சூழ்நிலையிலும், எந்த நேரத்திலும் அணு ஆயுதங்களை முதலில் சீனா பயன்படுத்தப் போவதில்லை என்பதை இதன் வாயிலாக உறுதியளிக்கிறோம்.

சீனா ஒரு தற்காப்பு அணுசக்தி கொள்கையை கடைப்பிடித்து வருகிறது-. மேலும், அணு ஆயுத சோதனைகளுக்காக தானாக விதித்துக்கொண்ட தடையை பின்பற்றி வருகிறது.

இதேபோ ன்று, உலகளாவிய அணு ஆயுத சோதனைகள் மீதான தடையையும், அணு ஆயுத பரவல் தடுப்பு முறையையும் பாதுகாப்பதற்கான அதன் உறுதிமொழிகளை அமெரிக்கா உண்மையுடன் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அணு ஆயுத சோதனைகளை மீண்டும் துவங்க வேண்டும் என்று அமெரிக்க ராணுவத்துக்கு, அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்வதை இதற்கு காரணமாக அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்கா முதலில் முழுமையான அணு ஆயுத சோதனையை துவக்கினால், ரஷ்யாவும் பதிலுக்கு சோதனையை துவங்கும் என, ரஷ்யா வெளிப்படையாக எச்சரித்துள்ளது. அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தின் உறுதிப்பாட்டை அமெரிக்கா மதிக்க வேண்டும் என, தற்போது சீனாவும் வலியுறுத்தியுள்ளது.

டிரம்பின் இந்த அறிவி ப்பு, உலகளாவிய அணு ஆயுத கட்டுப்பாட்டு கட்டமைப்பை பாதிக்கும் என்ற அச்சத்தின் காரணமாக, பெரும்பாலான நாடுகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

150 முறை உலகத்தை அழிக்க முடியும்!

அணு ஆயுத சோதனையை மீண்டும் துவங்க வேண்டியதன் அவசியம் குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டு தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா, 1992ம் ஆண்டு முதல் முழுமையான அணு ஆயுத சோதனைகளை தன்னார்வமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் சமீபத்திய அறிவிப்பு, பல ஆண்டுகளாக அமெரிக்கா கடைப்பிடித்து வந்த தன்னார்வ கட்டுப்பாட்டை மீறுவதற்கான ஒரு பெரிய கொள்கை மாற்றமாக உலக நாடுகள் பார்க்கின்றன. பல உலக நாடுகள் தொடர்ந்து அணு ஆயுதங்களை சோதனை செய்து வருவதால், தங்கள் நாடும் அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்ள தாம் உத்தரவிட்டுள்ளதாக, சமீபத்தில் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது: பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா உள்ளிட்ட பல நாடுகள் அணு ஆயுத சோதனைகளை ரகசியமாக பூமிக்கடியில் செய்து வருகின்றன. இது குறித்து அந்நாடுகள் வெளிப்படையாக தெரிவிக்காததால், அமெரிக்காவால் இந்த சோதனைகள் குறித்து கண்டிப்பாக அறிய முடியாது. சோதனைகள் நடப்பதற்கான சிறிய அதிர்வுகளை மட்டுமே அமெரிக்காவால் உணர முடிகிறது. பிற நாடுகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதால், அமெரிக்காவும் அதே அடிப்படையில் சோதனை செய்வது பொருத்தமாக இருக்கும். தற்போது அமெரிக்கா மட்டுமே சோதனை செய்யாத ஒரே நாடாக உள்ளது. அப்படியிருக்க நான் விரும்பவில்லை. அமெரிக்காவின் ஆயுதங்கள் செயல்படுவதை உறுதிப்படுத்த, அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும். அமெரிக்கா வேறு எந்த ஒரு நாட்டை விடவும் அதிக அணு ஆயுதங்களை கொண்டுள்ளது. உலகத்தை, 150 முறை தகர்க்கும் அளவுக்கு எங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us