UPDATED : அக் 13, 2025 09:47 PM
ADDED : அக் 13, 2025 09:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வரும் நவ.,5,6 ம் தேதிகளில் கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு முதல்வர் தலைமையில் நடக்கும். அப்போது அரசின் நலத்திட்டங்கள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படும். இம்மாநாட்டில் பேசும் முதல்வர், அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்குவார்.
இந்நிலையில், வரும் 5, 6 ம் தேதிகளில் சென்னையில் உள்ள தலைமைச்செயலகத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மாநாடு நடைபெற உள்ளது.