sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 மோடி, அமித் ஷா பதவி விலக காங்., கார்கே வலியுறுத்தல்

/

 மோடி, அமித் ஷா பதவி விலக காங்., கார்கே வலியுறுத்தல்

 மோடி, அமித் ஷா பதவி விலக காங்., கார்கே வலியுறுத்தல்

 மோடி, அமித் ஷா பதவி விலக காங்., கார்கே வலியுறுத்தல்

32


UPDATED : டிச 18, 2025 05:49 AM

ADDED : டிச 18, 2025 03:54 AM

Google News

32

UPDATED : டிச 18, 2025 05:49 AM ADDED : டிச 18, 2025 03:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை டில்லி நீதிமன்றம் நிராகரித்ததை வரவேற்கிறோம். பழிவாங்கும் அரசியலில் ஈடுபடும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்,'' என, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி உள்ளார்.

'நேஷனல் ஹெரால்டு' வழக்கில், பார்லி., - காங்., குழு தலைவர் சோனியா, அவரது மகனும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் உள்ளிட்டோருக்கு எதிராக, அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, டில்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் நிராகரித்தது.

'இந்த வழக்கு தனிநபரால் அளிக்கப்பட்ட புகாரின்படி துவங்கப்பட்டதே தவிர, முறையான முதல் தகவல் அறிக்கையின்படி அல்ல. 'எனவே, பண மோசடி சட்டத்தின் கீழ் இதை விசாரிக்க முடியாது' என, நீதிமன்றம் குறிப்பிட்டது. இதனால் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் நிம்மதி அடைந்துள்ளனர்.

இது குறித்து, டில்லியில் நேற்று, காங்., தலைவர் கார்கே கூறியதாவது: சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். உண்மை எப்போதும் வெல்லும். பழிவாங்கும் அரசியலில் ஈடுபடுவதை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்.

இது அவர்கள் முகத்தில் விழுந்த அறை போன்றது. இது போன்ற செயல்களை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதை அவர்கள் அறிய வேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக மத்திய விசாரணை அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கு, முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

ஜாமினில் தான் உள்ளனர்!


நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்., தலைவர்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். வழக்கில் இருந்தே சோனியா, ரா குல் விடுவிக்கப்பட்டது போல பேசி வருகின்றனர். அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை தான் டில்லி நீதிமன்றம் ஏற்கவில்லையே தவிர, வழக்கை தள்ளுபடி செய்யவில்லை. டில்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. சோனியா, ராகுல் ஜாமினில் தான் வெளியே உள்ளனர் என்பதை காங்., தலைவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
- கவுரவ் பாட்டியா செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,








      Dinamalar
      Follow us