sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

லாக்கப் மரணத்தை நாடு பொறுத்துக் கொள்ளாது: சுப்ரீம் கோர்ட்

/

லாக்கப் மரணத்தை நாடு பொறுத்துக் கொள்ளாது: சுப்ரீம் கோர்ட்

லாக்கப் மரணத்தை நாடு பொறுத்துக் கொள்ளாது: சுப்ரீம் கோர்ட்

லாக்கப் மரணத்தை நாடு பொறுத்துக் கொள்ளாது: சுப்ரீம் கோர்ட்

10


ADDED : நவ 25, 2025 05:40 PM

Google News

10

ADDED : நவ 25, 2025 05:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: லாக்கப்களில் நடக்கும் வன்முறையை நாடு பொறுத்துக் கொள்ளாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

போலீஸ் ஸ்டேசன்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாதது தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது ராஜஸ்தானின் உதய்ப்பூர் பகுதியில் லாக்கப்களில் 11 பேர் மரணம் அடைந்தது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது: ராஜஸ்தான் போலீஸ் ஸ்டேசன்களில் கடந்த 8 மாதங்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை நாடு சகித்துக் கொள்ளாது. இது அமைப்பு மீதான குறை. லாக்கப் மரணங்கள் நடக்கக்கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏன் அபிடவிட் தாக்கல் செய்யவில்லை . நீதிமன்றத்தை சாதாரணமாக மத்திய அரசு எடுத்துக் கொள்கிறதா என கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், லாக்கப் மரணத்தை யாராலும் நியாயப்படுத்த முடியாது. இந்த வழக்கில் நான் ஆஜராகவில்லை. அதேநேரத்தில் இந்த நீதிமன்றத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என விளக்கமளித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கில் அடுத்த 3 வாரத்தில் அபிடபிட் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us