sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டில்லி குண்டுவெடிப்பு: வெடிபொருட்களை சோதிக்க வீட்டிலேயே ஆய்வகம் அமைத்த சதிகாரன் உமர்

/

டில்லி குண்டுவெடிப்பு: வெடிபொருட்களை சோதிக்க வீட்டிலேயே ஆய்வகம் அமைத்த சதிகாரன் உமர்

டில்லி குண்டுவெடிப்பு: வெடிபொருட்களை சோதிக்க வீட்டிலேயே ஆய்வகம் அமைத்த சதிகாரன் உமர்

டில்லி குண்டுவெடிப்பு: வெடிபொருட்களை சோதிக்க வீட்டிலேயே ஆய்வகம் அமைத்த சதிகாரன் உமர்

4


ADDED : நவ 16, 2025 09:17 AM

Google News

4

ADDED : நவ 16, 2025 09:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: டில்லி கார் குண்டுவெடிப்பு நிகழ்த்திய சதிகாரன் டாக்டர் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் வைத்திருந்தான். டில்லியில் குண்டுவெடிப்பு நடத்த சோதித்து பார்த்து இருக்கிறான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

டில்லி செங்கோட்டையில் போக்குவரத்து சிக்னலில் கார் ஒன்று, கடந்த 10ம் தேதி வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் காரை இயக்கிய டாக்டர் உமர் நபி உட்பட, 13 பேர் பலியாகினர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பயங்கரவாத தாக்குதல் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபி, பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் டாக்டராக பணியாற்றியதும், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்தவன் என்பதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. தாக்குதலைத் தொடர்ந்து, புல்வாமாவின் கோய்ல் கிராமத்தில் உள்ள உமரின் வீட்டில் பாதுகாப்பு படையினர், கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன; வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடன் அவன் தொடர்பில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இந்த சூழலில், அவனது வீட்டுக்கு போலீசார், சி.ஆர்.பி.எப்., எனப்படும் துணை ராணுவப் படையினர் அடங்கிய பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றனர். பின்னர், டாக்டர் உமரின் வீடு பாதுகாப்பான முறையில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. முழு வீடும் தரைமட்டமானதை அடுத்து, கட்டட இடிபாடுகளில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர்.

அப்போது சதிகாரன் டாக்டர் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் வைத்திருந்தான். டில்லியில் குண்டுவெடிப்பு நடத்த சோதித்து பார்த்து இருக்கிறான் என்பது தெரியவந்துள்ளது. மேலும், டெலிகிராம் மூலம் தனது பாகிஸ்தான் கூட்டாளிகள் பகிர்ந்து கொண்ட வெடிகுண்டு தயாரிக்கும் நுட்பங்களையும் சோதித்து இருக்கிறான்.

டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் குற்றவாளிகள் மூவரில் டாக்டர் உமர் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணராக இருந்து இருக்கிறான். அதனால் தான் அவன் தனது வீட்டில் ஒரு ஆய்வகத்தை அமைத்து இருக்கிறான் என்று வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

நவம்பர் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்த சோதனையின் போது, பரிதாபாத்தில் உள்ள இரண்டு தனித்தனி வீடுகளில் இருந்து 2,900 கிலோ எடையுள்ள வெடிபொருட்கள் மீட்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us