sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஹிந்து விரோத போக்கை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர் பா.ஜ.,வில் ஐக்கியம்

/

ஹிந்து விரோத போக்கை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர் பா.ஜ.,வில் ஐக்கியம்

ஹிந்து விரோத போக்கை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர் பா.ஜ.,வில் ஐக்கியம்

ஹிந்து விரோத போக்கை கண்டித்து தி.மு.க., கவுன்சிலர் பா.ஜ.,வில் ஐக்கியம்

57


ADDED : டிச 16, 2025 05:05 AM

Google News

57

ADDED : டிச 16, 2025 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: தி.மு.க.,வின் ஹிந்து விரோத போக்கை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் நகராட்சி தி.மு.க., கவுன்சிலர் சங்கர், அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.

ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதம் பகுதியைச் சேர்ந்த சங்கர் 2005ல் தி.மு.க., சார்பில் நகராட்சி வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின் 2022ல் மீண்டும் நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட தி.மு.க., சீட் கொடுக்காததால், நகராட்சி 8வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின் மீண்டும் தி.மு.க.,வில் இணைந்து, தற்போது தி.மு.க., நகர் பொருளாளராக உள்ளார்.

இந்நிலையில் தி.மு.க.,வின் ஹிந்து விரோதம் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று முன்தினம் பா.ஜ.,வினர் நடத்திய பொதுக்கூட்ட மேடையில் அக்கட்சியில் இருந்து சங்கர் விலகி, மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார்.

பின் கவுன்சிலர் சங்கர் பேசியதாவது : தி.மு.க., அரசு தொடர்ந்து ஹிந்து விரோத போக்கை கடைபிடிக்கிறது. உயர்நீதிமன்றம் தீர்ப்பை மதிக்காமல், ஹிந்துக்களின் மனதை புண்படுத்தி திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாதது கண்டனத்திற்குரியது. மேலும் ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் செயல்பாடு இன்றி முடங்கி கிடக்கிறது என்றார்.






      Dinamalar
      Follow us