தாக்குதல் நடத்தினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
தாக்குதல் நடத்தினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்: ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
ADDED : மார் 01, 2026 11:30 AM

வாஷிங்டன்: ஈரான் தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரான் இன்று மிக கடுமையாக தாக்க போவதாக கூறியது. பழிவாங்குவதாக நினைத்து தாக்குதல் நடத்தினால் ஈரான் மீது கடுமையாக தாக்குதல் நடத்தப்படும். தாக்குதல் நடத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் பதில்
அதேநேரத்தில் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் கூறியதாவது: கமேனி படுகொலை பெருங்குற்றம். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதில் தராமல் ஓய மாட்டோம். பெரும் குற்றம் இளைத்தோர் வருத்தப்படும் வகையில் பதிலடி அமையும். நாங்கள் தரப் போகும் பதிலடி இஸ்லாமிய நாடுகள் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

