sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமநாதபுரத்தில் அதிகாலை பயணத்தால் விபரீதம்: கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

/

ராமநாதபுரத்தில் அதிகாலை பயணத்தால் விபரீதம்: கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

ராமநாதபுரத்தில் அதிகாலை பயணத்தால் விபரீதம்: கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

ராமநாதபுரத்தில் அதிகாலை பயணத்தால் விபரீதம்: கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

1


ADDED : டிச 06, 2025 07:12 AM

Google News

1

ADDED : டிச 06, 2025 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இரண்டு கார்கள் நேருக்கு நேர், மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ஆந்திராவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி ஐயப்ப பக்தர்கள் சென்ற காரும், ஏர்வாடிக்கு சென்ற காரும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

விபத்து அதிகாலை நேரத்தில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.






      Dinamalar
      Follow us