sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்; பீஹாரில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ

/

சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்; பீஹாரில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ

சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்; பீஹாரில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ

சூடுபிடித்தது தேர்தல் பிரசாரம்; பீஹாரில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ

6


UPDATED : நவ 02, 2025 07:04 PM

ADDED : நவ 02, 2025 06:49 PM

Google News

6

UPDATED : நவ 02, 2025 07:04 PM ADDED : நவ 02, 2025 06:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில், தேஜ கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு பாட்னாவில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. வரும் 6ல், முதல் கட்டமாக, 121 தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பீஹாரில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது.

ஒருபுறம், பிரதமர் மோடி போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ராவில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசினார். அவர் காங்கிரஸ், ஆர்ஜேடி பீஹாரின் அடையாளத்தை அழிக்க விரும்புகின்றன என குற்றம் சாட்டி இருந்தார்.

இதற்கிடையே தேஜ கூட்டணிக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முசாபர்பூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் லாலு பிரசாத் தலைமையிலான ஆர்ஜேடி கட்சியை கடுமையாக சாடி பேசினார். மறுபுறம் பெகுசராய் பகுதியில் காங்கிரஸ் எம்பி ராகுல் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் குளத்தில் குதித்து மீனவர்களுடன் இணைந்து மீன்பிடித்து ஓட்டு சேகரித்தார்.

காலையிலிருந்தே பீஹார் தேர்தல் களம் பரபரப்பாகவே இருந்து வருகிறது. தற்போது, மாலை நேரத்தில் தேஜ கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு பாட்னாவில் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் திரண்ட ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.திறந்தவெளி வாகனத்தில் தாமரை சின்னத்தை காட்டியவாறு, மக்கள் அனைவரும் தேஜ கூட்டணிக்கு ஓட்டளிக்குமாறு பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

நல்லாட்சி!

இதற்கிடையே பீஹார் தேர்தல் பிரசாரம் தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி கூறி இருப்பதாவது: தேர்தல் பிரசார கூட்டத்திற்கு எனது குடும்ப உறுப்பினர்கள் ஏராளமானோர் வந்து தங்கள் ஆசிகளை வழங்கினர். பீஹார் மக்கள் நல்லாட்சி செய்யும் அரசை மீண்டும் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளனர் என்பதற்கான தெளிவான அறிகுறி இது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.








      Dinamalar
      Follow us