சுற்றுச்சூழல் தொடர்பான துறைகளில் அபரிமிதமான முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்
சுற்றுச்சூழல் தொடர்பான துறைகளில் அபரிமிதமான முன்னேற்றம்: பிரதமர் மோடி பெருமிதம்
UPDATED : செப் 19, 2026 11:55 AM
ADDED : செப் 19, 2026 11:54 AM

புதுடில்லி: கடந்த 12 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்துத் துறைகளிலும் இந்தியா அபரிமிதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் வழக்குகளின் நிலை, பசுமை தீர்ப்பாயத்தின் வழக்குப் பட்டியல் உள்ளிட்டவற்றை வக்கீல்கள் மற்றும் மக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் என்ஜிடி (தேசிய பசுமை தீர்ப்பாயம்) மொபைல் செயலியை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கிற்குத் தடை விதித்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளில், சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்துத் துறைகளிலும் இந்தியா அபரிமிதமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.
3 ஆயிரம் டூ 25 லட்சம்
மெட்ரோ ரயில்
உயிரி எரிபொருள் கூட்டமைப்பு உள்ளிட்டவை சுற்றுச்சூழல் மீதான இந்தியாவின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும். 2014க்கு முன்பு, இந்தியாவில் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவைகள் இருந்தன; அவற்றின் மொத்த நீளம் 250 கிலோமீட்டருக்கும் குறைவாகவே இருந்தது.
மின்மயமாக்கல்
எங்கள் வளர்ச்சி வேகமானதாகவும், அதே சமயம் நிலையானதாகவும் உள்ளது. இன்று, நீர் சேமிப்புத் துறையிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 1.5 கோடி நீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
