தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு சவரன் ரூ.87 ஆயிரத்தை தாண்டியது!
தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு சவரன் ரூ.87 ஆயிரத்தை தாண்டியது!
ADDED : அக் 01, 2025 09:58 AM

சென்னை: சென்னையில் இன்று (அக்., 01) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் (செப் 29), ஆபரண தங்கம் கிராம், 10,770 ரூபாய்க்கும், சவரன், 8 6,160 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று (செப் 30) தங்கம் விலை கிராமுக்கு, 90 ரூபாய் உயர்ந்து, 10,860 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சவரனுக்கு, 720 ரூபாய் அதிகரித்து, 86,880 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இந்நிலையில், இன்று (அக்., 01) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.87,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,890க்கு விற்பனை ஆகிறது.
ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தை கடந்துள்ளதால் சாமானிய மக்கள் தங்க நகையை நினைத்து பார்க்க கூட முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு சவரன் தங்கம் விலை ரூ.87 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.