sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மல்லையா, லலித் மோடியை நாடு கடத்த அரசு தீவிரம்!

/

மல்லையா, லலித் மோடியை நாடு கடத்த அரசு தீவிரம்!

மல்லையா, லலித் மோடியை நாடு கடத்த அரசு தீவிரம்!

மல்லையா, லலித் மோடியை நாடு கடத்த அரசு தீவிரம்!


ADDED : டிச 27, 2025 05:30 AM

Google News

ADDED : டிச 27, 2025 05:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வங்கிகளில் கடன் பெற்று அவற்றை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, ஐ.பி.எல்., எனப்படும், 'இந்தியன் பிரீமியர் லீக்' முன்னாள் தலைவர் லலித் மோடி உள்ளிட்டோரை திரும்ப கொண்டு வர, வெளிநாட்டு அரசுகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

விஜய் மல்லையா தன் 70வது பிறந்த நாளை சமீபத்தில் வெகுவிமரிசையாக கொண்டாடினார். அதில், விஜய் மல்லையாவும், லலித் மோடியும் ஒன்றாக பங்கேற்றனர். இதுதொடர்பாக லலித் மோடி, சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டார்.

இது சமூக வலைதளங்களில் பரவி, பல்வேறு விமர்சனங்களையும் எழுப்பியது. இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு அவர் கூறுகையில், “பொருளாதார குற்ற வழக்குகளில் தப்பியோடிய குற்றவாளிகளை நம் நாட்டிற்கு மீண்டும் கொண்டு வருவதில், மத்திய அரசு உறுதியுடன் உள்ளது. அதற்காக, பல நாடுகளின் அரசுகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். இதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டுள்ளோம்,” என்றார்.






      Dinamalar
      Follow us