sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை

/

 ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை

 ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை

 ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை


ADDED : ஜன 08, 2026 06:27 AM

Google News

ADDED : ஜன 08, 2026 06:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தென்கிழக்கு வங்கக் கடல், பூமத்திய ரேகையை ஒட்டிய, இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

நேற்று காலை நிலவரப்படி, இலங்கைக்கு தென் கிழக்கில் 790 கி.மீ., ; சென்னைக்கு தென்கிழக்கில், 1,270 கி.மீ., தொலைவில் நிலவியது.

அடுத்த, 24 மணி நேரத்தில், இந்த அமைப்பு, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில், உள் மாவட்டங்களில், சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில், நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, அப்பகுதிகளுக்கு, 'ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

ஜன., 10, 12ம் தேதிகளில், சென்னை, செங்கல்பட்டு உட்பட, கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us