நாளை தீபாவளியன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நாளை தீபாவளியன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ADDED : அக் 19, 2025 02:24 PM

சென்னை: நாளை தீபாவளியன்று (அக் 20ம்) 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று (அக் 19) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (அக் 20) தீபாவளியன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் (அக்., 21)
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் நாளை மறுநாள் (அக்., 21) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
அக்டோபர் 22ம் தேதி
திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்களில் அக்டோபர் 22ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஆரஞ்சு அலெர்ட்
அக்டோபர் 23ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: * திருவள்ளூர்
* சென்னை
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* செங்கல்பட்டு
* வேலூர்
அக்டோபர் 23ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: * கிருஷ்ணகிரி
* திருப்பத்தூர்
* தர்மபுரி
* திருவண்ணாமலை
* விழுப்புரம்
ஆரஞ்சு அலெர்ட்
அக்டோபர் 24ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* வேலூர்
* திருப்பத்தூர்
* கிருஷ்ணகிரி
அக்டோபர் 24ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: * நீலகிரி
* ஈரோடு
* கோவை
* தர்மபுரி* திருவண்ணாமலை
* ராணிப்பேட்டை
* காஞ்சிபுரம்
* சென்னை
* திருவள்ளூர்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.