UPDATED : அக் 09, 2025 06:29 AM
ADDED : அக் 09, 2025 06:28 AM

சென்னை:'காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட, 10 மாவட்டங்களில், இன்று கனமழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர், கள்ளக்குறிச்சி, துாத்துக்குடி விமான நிலையம், அரியலுார் மாவட்டம் செந்துறை ஆகிய பகுதிகளில், தலா 3 செ.மீ., மழை பெய்துள்ளது.
இந்நிலையில், தென் மாநில பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வட மாவட்டங்களில் அனேக இடங்களிலும், தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், இன்றும், நாளையும், இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும் 11, 12ம் தேதிகளில், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இன்று, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், கனமழை பெய்யும்.
வரும் 11ல், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், கடலுார், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும், கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அக்., 12ல், கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார், கடலுார், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில், அடுத்த 24 மணி நேரத்தில், இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்ப நிலையை பொறுத்தவரை, தமிழகம், புதுச்சேரியில், வரும் 12ம் தேதி வரை, 2 முதல் 3 டிகிரி செல்ஷியஸ் வரை குறையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.