sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஆஸி., யில் பயங்கரவாதியை மடக்கிய ஹீரோவுக்கு 2.5 மில்லியன் டாலர் பரிசு!

/

ஆஸி., யில் பயங்கரவாதியை மடக்கிய ஹீரோவுக்கு 2.5 மில்லியன் டாலர் பரிசு!

ஆஸி., யில் பயங்கரவாதியை மடக்கிய ஹீரோவுக்கு 2.5 மில்லியன் டாலர் பரிசு!

ஆஸி., யில் பயங்கரவாதியை மடக்கிய ஹீரோவுக்கு 2.5 மில்லியன் டாலர் பரிசு!

7


UPDATED : டிச 19, 2025 05:17 PM

ADDED : டிச 19, 2025 05:10 PM

Google News

7

UPDATED : டிச 19, 2025 05:17 PM ADDED : டிச 19, 2025 05:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிட்னி: பயங்கரவாத தாக்குதலின் போது, ஆயுதங்கள் ஏதுமின்றி பயங்கரவாதியை மடக்கிப்பிடித்த போது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல் அஹமதுவுக்கு 2.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.22.41 கோடி) பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒருவர் பின்னால் இருந்து சாமர்த்தியமாக மடக்கி பிடித்தார். மேலும், எந்த ஆயுதமும் இல்லாமல் வெறும் கைகளால் பயங்கரவாதியை தாக்கி துப்பாக்கியையும் பறித்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அவரது அசாத்திய தைரியத்தை பாராட்ட வைத்துள்ளது. அவர் சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அல் அஹமது, 43, என தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல்-அஹமதுவை நேரில் சென்று, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நலம் விசாரித்தார்.

அஹமதுவை ஆஸ்திரேலியாவின் ஹீரோ என பாராட்டி இருந்தார். துப்பாக்கிச் சூட்டை சமாளித்து பல உயிர்களைக் காப்பாற்றிய அஹமதுவுக்கு சமூக நன்கொடைகளாக 2.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.22.41 கோடி) அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது. கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட காயங்களுக்கு தற்போது சிகிச்சை பெற்று வரும் அஹமது, தனது மருத்துவமனை படுக்கையிலிருந்தே காசோலையைப் பெற்றார்.

உயிர்களைக் காப்பாற்ற அவரது துணிச்சலுக்காக அவர் பாராட்டப்படுகிறார். இரண்டு குழந்தைகளின் தந்தையான அவருக்கு சமூக ஊடகங்கள் மட்டுமல்ல, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பிற உலகத் தலைவர்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து இருக்கின்றனர்.






      Dinamalar
      Follow us