sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

/

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

1


ADDED : அக் 09, 2025 08:23 AM

Google News

1

ADDED : அக் 09, 2025 08:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் பகுதியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். அதற்குள் 3 பேர் உயிரிழந்தனர். பின்னர் அந்த நபர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மெக்கானிக் வேலை பார்த்து வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர் துப்பாக்கிச்சூடு நடத்திய இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

சமீபகாலமாக அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த மாதம் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். அதை தொடர்ந்து, வாகன நிறுத்துமிடத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us