sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன

/

இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன

இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன

இந்தியா - நியூசிலாந்து பேச்சுகள் வெற்றிகரமாக நிறைவடைந்தன

8


UPDATED : டிச 23, 2025 02:17 PM

ADDED : டிச 23, 2025 06:41 AM

Google News

8

UPDATED : டிச 23, 2025 02:17 PM ADDED : டிச 23, 2025 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக இந்தியாவும், நியூசிலாந்தும் அறிவித்துள்ளன. இரு நாட்டு பிரதமர்களும் நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடி, இதை உறுதி செய்தனர்.

இதையடுத்து, அடுத்த மூன்று மாதங்களில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பு சரக்கு வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின்படி இந்தியாவின் 100 சதவீத ஏற்றுமதிகளுக்கும் நியூசிலாந்து சுங்க வரி விலக்கு வழங்க முன்வந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 1.80 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய நேரடி முதலீட்டை மேற்கொள்ள உறுதி அளித்துள்ளது.

இதேபோல, நியூசிலாந்தின் 95 சதவீத ஏற்றுமதிகளுக்கு, சுங்க வரி விலக்கு வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

தற்போதைய வரிவிதிப்பு


* இந்திய பொருட்களுக்கு நியூசிலாந்தில் சராசரி சுங்க வரி: 2.30%

* நியூசிலாந்து பொருட்களுக்கு இந்தியாவில் சராசரி சுங்க வரி: 17.80%

கடந்து வந்த பாதை

2025


மார்ச் 16

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் இந்தியா வந்திருந்தபோது, வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுகள் அதிகாரப் பூர்வமாகத் துவங்கப்பட்டன

மே 5 - 9

முதல் சுற்றுப் பேச்சு டில்லியில் நடைபெற்றது

ஜூலை 14 - 25

இரண்டாம் சுற்றுப் பேச்சு மீண்டும் டில்லியில்

செப்டம்பர் 15 - 19

மூன்றாம் சுற்றுப் பேச்சு நியூசிலாந்தின் குயின்ஸ் டவுன் நகரில் நடைபெற்றது

அக்டோபர் 13 - 17

டில்லியில் இடைக்காலச் சுற்றுப் பேச்சு நடத்தப்பட்டது

நவம்பர் 3 - 7

நான்காம் சுற்றுப் பேச்சு, நியூசிலாந்தின் ஆக்லாந்தில் நடைபெற்றது

டிசம்பர் 22

பிரதமர் நரேந்திர மோடியும், நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸனும் தொலைபேசியில் உரையாடி, பேச்சுகள் வெற்றிகரமாக முடிவடைந்ததை அறிவித்தனர் 2026 மார்ச் மாதத்துக்கு முன் ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இரு நாடுகளின் நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்ததும், ஜூன் மாதத்துக்கு பின் ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வரும்

இருதரப்பு வர்த்தகம் 2024 - 25: ரூ. 21,600 கோடி 2029 - 30: ரூ. 45,000 கோடி இரு தரப்பு சரக்கு வர்த்தகம் 2024 - 25: ரூ. 11,700 கோடி



Image 1511921

கூடுதல் பயன்


* 5,000 தொழில் நிபுணர்களுக்கு தற்காலிக விசா வழங்கவும்; 1,000 பணியாளர்களுக்கு விடுமுறை கால விசா வழங்கவும் நியூசிலாந்து முடிவு

* ஆயுஷ் மற்றும் யோகா பயிற்றுனர்கள், சமையல் நிபுணர்கள் மற்றும் இசை ஆசிரியர்களுக்கு இந்த தொழில் நிபுணர் விசா பொருந்தும்

* தகவல் தொழில்நுட்பம், கல்வி, நிதி சேவைகள், சுற்றுலா துறைகளில் அன்னிய நேரடி முதலீடு

முக்கிய அம்சங்கள்


* நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்கள், காய்கறிகள், சர்க்கரை, செம்பு, அலுமினியம் பொருட்களுக்கு வரி விலக்கு வழங்கப்படவில்லை

* இந்த ஒப்பந்தம் வெறும் ஒன்பதே மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த நாடு ஒன்றோடு இந்தியா இவ்வளவு குறுகிய காலத்தில் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

- நமது நிருபர் -:






      Dinamalar
      Follow us