புற்றுநோய் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள்: சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் ரகுராமன் கண்ணனுக்கு கவுரவம்
புற்றுநோய் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள்: சென்னை ஐஐடி முன்னாள் மாணவர் ரகுராமன் கண்ணனுக்கு கவுரவம்
ADDED : டிச 16, 2025 08:47 AM

புதுடில்லி: சென்னை ஐஐடி முன்னாள் மாணவரான ரகுராமன் கண்ணனுக்கு அமெரிக்க விஞ்ஞானிகள் அமைப்பில் கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் செயல்படும் நேஷனல் அகாடமி ஆப் இன்வென்டர்ஸ் அமைப்பு, மனித குலத்தின் மேன்மைக்காக கண்டுபிடிப்புகளை உருவாக்கும் விஞ்ஞானிகளுக்கான உயர் அமைப்பாகும். இதில் உறுப்பினராக நியமிக்கப்படுவது, விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் கவுரவம். அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த புற்றுநோய் ஆராய்ச்சியாளர் ரகுராமன் கண்ணன் இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய வழிமுறைகளை உருவாக்கியவர். தனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் நான்கு ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் தொடங்கியுள்ளார். இவர் தற்போது அமெரிக்காவின் மிசோரி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம், அமெரிக்காவில், குறிப்பாக உலகளாவிய சுகாதார துறைகளில், அதிநவீன ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு இந்திய விஞ்ஞானிகளின் பங்களிப்பை எடுத்துரைக்கிறது.
நுரையீரல், கருப்பை, மார்பகம், கணையம் மற்றும் கல்லீரல் புற்றுநோய் சிகிச்சையில் இவரது கண்டுபிடிப்புகள் பேருதவியாக இருக்கின்றன. ரகுராமன் கண்ணன் சென்னை ஐஐடியில் வேதியியல் பிரிவில் எம்எஸ் பட்டம் பெற்றவர். இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நிறுவனத்தில் டாக்டரேட் பட்டம் பெற்றவர்.

