sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்திய விண்வெளி திட்டங்கள் உற்சாகம் அளிக்கிறது: சுனிதா வில்லியம்ஸ்

/

இந்திய விண்வெளி திட்டங்கள் உற்சாகம் அளிக்கிறது: சுனிதா வில்லியம்ஸ்

இந்திய விண்வெளி திட்டங்கள் உற்சாகம் அளிக்கிறது: சுனிதா வில்லியம்ஸ்

இந்திய விண்வெளி திட்டங்கள் உற்சாகம் அளிக்கிறது: சுனிதா வில்லியம்ஸ்


UPDATED : ஜன 22, 2026 10:22 PM

ADDED : ஜன 22, 2026 10:14 PM

Google News

UPDATED : ஜன 22, 2026 10:22 PM ADDED : ஜன 22, 2026 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்: '' இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் உற்சாகம் அளிக்கிறது,'' என நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள சுனிதா வில்லியம்ஸ், திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் பயணம் அற்புதமாக இருந்தது. இந்தியாவில் இருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது. கனவு என்பது ஒருவரின் கற்பனைக்கு ஏற்றவாறு பெரியதாக இருக்கும். குறிப்பாக இன்றைய இந்த சூழலில் விஷயங்கள் மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றன. மக்கள் புதிய யோசனைகளைக் கொண்டு வந்து அவற்றை நிஜமாக்கி வருகிறார்கள்.

கடந்த காலத்தில் கண்டுபிடிப்புகள் தொழில்நுட்பத்தால் தடைபடக்கூடும் என்ற நிலை இருந்தது. ஆனால், இ்பபோது மக்களிடம் உள்ள கண்டுபிடிப்புகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. கற்பனை மட்டுமே உண்மையான வரம்பு.

இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் உற்சாகம் அளிக்கிறது. எந்தவொரு திட்டமும் நிஜமாகி வருகிறது. சர்வதேச அளவில் மேலும் மேலும் ஈடுபடும் அதே நேரத்திலும் சொந்த திட்டங்களில் தற்சார்புடன் செயல்பட்டு வருகிறது.வெகுவிரைவில் விண்வெளியில் இஸ்ரோ கால் பதிக்கும். இந்திய வீரர் கேப்டன் சுபான்ஷூ சுக்லாவை நேரில் சந்தித்தது மகிழ்ச்சி.

பூமியில் மனிதர்களுக்கு இடையே பெரிய மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலை நாமே உருவாக்கிக் கொள்கிறோம். இவை அனைத்துக்கும் தீர்வு காண முடியும். சர்வதேச அளவில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்றினால் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us