தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/இண்டிகோ விமானத்தில் கோளாறு; அரை மணி நேரம் பரிதவித்த பயணிகள்

இண்டிகோ விமானத்தில் கோளாறு; அரை மணி நேரம் பரிதவித்த பயணிகள்

இண்டிகோ விமானத்தில் கோளாறு; அரை மணி நேரம் பரிதவித்த பயணிகள்


ADDED : மே 19, 2026 01:57 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 01:57 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வதோதரா: குஜராத்தில் இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சுமார் அரை மணிநேரம் மின் விளக்கு மற்றும் ஏசி இல்லாமல் பயணிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.

குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8.40 மணிக்கு 160 பயணிகளுடன் இண்டிகோ விமானம், டில்லி நோக்கி புறப்பட தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் ஏறி அமர்ந்திருந்த நிலையில், விமானத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானத்தில் மின் விளக்குகள் அணைந்தன. மேலும், ஏசியும் வேலை செய்யவில்லை.

இதனால், பயணிகள் அனைவரும் இருளில் ஏசியின்றி அமர வேண்டிய நிலை ஏற்பட்டது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை வியர்த்து விறுவிறுத்துப் போகினர். சுமார் அரைமணி நேரத்திற்கு பின்பே கோளாறு சரி செய்யப்பட்டது.

இந்தக் கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் தாமதமாக விமானம் புறப்பட்டு சென்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us