அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி
அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உறுதி
ADDED : ஜூன் 23, 2026 06:33 PM

ஜெருசலேம்: ''அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை'' என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து உள்ளார்.
போர் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் அதிகாரிகளுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:ஈரானை எதிர்கொள்வதற்கு இஸ்ரேல் தனது சொந்த ஆயுத உற்பத்தி திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமது அமெரிக்க நண்பர்களிடமிருந்து நாங்கள் பெற்றுள்ள ஆதரவையும், பல ஆண்டுகளாக நான் பெற்றுத் தந்துள்ள ஆதரவையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன்.
ஆனால் இன்று நான் சொல்கிறேன்: நமக்கு நமது சொந்த சுதந்திரமான ஆயுத உற்பத்தி அமைப்பு தேவை. நாம் நமது சொந்த ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டும். அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை. இவ்வாறு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
