sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.77 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவன்; பாதுகாப்பு படை முன் கூட்டாளிகளுடன் சரண்

/

ரூ.77 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவன்; பாதுகாப்பு படை முன் கூட்டாளிகளுடன் சரண்

ரூ.77 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவன்; பாதுகாப்பு படை முன் கூட்டாளிகளுடன் சரண்

ரூ.77 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவன்; பாதுகாப்பு படை முன் கூட்டாளிகளுடன் சரண்


ADDED : டிச 07, 2025 07:32 PM

Google News

ADDED : டிச 07, 2025 07:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போபால்: பிடித்துக் கொடுத்தால் ரூ.77 லட்சம் வெகுமதி என்ற அறிவிப்புடன், நாடு முழுவதும் தேடப்பட்ட நக்சல் தலைவன், மத்திய பிரதேசத்தில் ஆயுதங்களுடன் சரண் அடைந்துள்ளான்.

2026 மார்ச் மாதத்திற்குள் நாட்டில் நக்சல்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. பாதுகாப்பு படைகளின் நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாமல், வன்முறையை கைவிட்டு ஏராளமான நக்சல் தலைவர்கள், அதன் இயக்கத்தினர் சரண் அடைந்து வருகின்றனர்.

அந்த வகையில் நாடே தீவிரமாக தேடி வரும் மற்றும் ரூ.77 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் தலைவன், தமது கூட்டாளிகளுடன் மத்திய பிரதேச மாநிலத்தில் பாலகாட் பாதுகாப்பு படை முன்பு சரண் அடைந்துள்ளான். சரண் அடைந்துள்ள நக்சல் தலைவன் பெயர் சுரேந்தர் (எ) கபீர். இவனுடன் 10 பேரும் சரண் அடைந்திருக்கின்றனர்.

தமது நம்பிக்கைக்குரிய வனக்காவலர் ஒருவர் மூலம் பாதுகாப்பு படையினருடன் பேச்சு வார்த்தை நடத்திய சுரேந்தர் முதலில் சத்தீஸ்கர் மாநில அரசு அதிகாரிகள் முன்னிலையில் சரண் அடைவதாக திட்டமிட்டு இருந்தான்.

ஆனால், ம.பி. பாதுகாப்பு படையினர் நடத்திய பல கட்ட பேச்சு வார்த்தைகளின் எதிரொலியாக, பாலகாட் பகுதியில் உள்ள ஐஜியின் அதிகாரப்பூர்வ பங்களாவில் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில் இன்று (டிச.7) 4 பெண்கள் உட்பட 10 நக்சல்கள் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைந்தனர். சுரேந்தர் உள்ளிட்டோர் இரு குழுக்களாக ஆயுதங்களுடன் சரண் அடைந்தனர்.

அப்போது தாங்கள் வைத்து இருந்த ஏராளமான ஆயுதங்கள், நவீன ஏகே 47 ரக துப்பாக்கிகள், அதற்கான தோட்டாக்கள், கையெறி குண்டுகள், டெட்டனேட்டர் வெடி பொருட்களை அவர்கள் ஒப்படைத்தனர்.

சுரேந்தர் உடன் அவனின் நெருங்கிய கூட்டாளி ராகேஷ் ஹோடி என்பவனும் சரண் அடைந்துள்ளான். இந்த சரண் நடடிவக்கையின் மூலம், மாண்ட்லா மாவட்டம், நக்சல்கள் இல்லாத மாவட்டமாக பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

இதே பாலகாட்டில் பெண் நக்சல் சரண் அடைந்த ஒரு மாதத்திற்கு பின்னர் இந்த நிகழ்வு பதிவாகி இருக்கிறது. நக்சல்களுக்கு புதிய மறுவாழ்வு என்ற அரசின் அறிவிப்புக்கு பின்னர், நடைபெற்ற மிக பெரிய சரண் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us