UPDATED : டிச 05, 2025 05:57 PM
ADDED : டிச 05, 2025 04:58 PM

சென்னை: பிரபல அரசியல் மேடை பேச்சாளர் நாஞ்சில் சம்பத், நடிகர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.
எந்த தேர்தலையும் சந்திக்காத கட்சி நடிகர் விஜய்யின் தவெக. வரும் தேர்தலில் அந்தக் கட்சி தனித்துப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
சமீபத்தில் அந்த கட்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார்.அதன் தொடர்ச்சியாக இன்று, பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார்.
இதற்கு முன்னர், திமுக, மதிமுக, அதிமுகவில் நாஞ்சில் சம்பத் இருந்தார். அதன் பின்னர் எந்த கட்சியிலும் சேராமல் அரசியல் தொடர்பான பொது விவாத மேடைகளில் பேசி வந்தார்.
திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டங்களில் சில ஆண்டுகளாக பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
சில திரைப்படங்களிலும் நடித்தார். இளம் நடிகர் ஒருவர் படத்தில் அரசியல்வாதியாக அவர் நடித்து, 'துப்புனா துடைச்சுக்குவேன்' என்று பேசிய வசனம் பிரபலமானது.
அண்மைக்காலமாக தவெகவுக்கு ஆதரவான கருத்துகளை பொது வெளியில் அவர் பேசி வந்த நிலையில் தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.

