sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

டிரம்ப் அழைப்பை ஏற்றுக் கொண்ட நெதன்யாகு; காசா அமைதி வாரியத்தில் இணைவதாக அறிவிப்பு

/

டிரம்ப் அழைப்பை ஏற்றுக் கொண்ட நெதன்யாகு; காசா அமைதி வாரியத்தில் இணைவதாக அறிவிப்பு

டிரம்ப் அழைப்பை ஏற்றுக் கொண்ட நெதன்யாகு; காசா அமைதி வாரியத்தில் இணைவதாக அறிவிப்பு

டிரம்ப் அழைப்பை ஏற்றுக் கொண்ட நெதன்யாகு; காசா அமைதி வாரியத்தில் இணைவதாக அறிவிப்பு


ADDED : ஜன 21, 2026 04:37 PM

Google News

ADDED : ஜன 21, 2026 04:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: அமெரிக்கா உருவாக்கி உள்ள காசா அமைதி வாரியத்தில் சேருமாறு டிரம்ப் விடுத்த அழைப்பை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக் கொண்டு உள்ளார்.

இஸ்ரேலுடனான போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது காசா. இங்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக ஐ.நா.சபைக்கு மாற்றாக அமைதி வாரியம் (Board Of Peace) என்ற புதிய சர்வதேச அமைப்பு ஒன்றை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி இருக்கிறார். இந்த புதிய அமைப்பில் ரூ. 9000 கோடி கட்டணம் செலுத்தி இணைந்து கொள்ளலாம் என்றும் டிரம்ப் கூறி உள்ளார்.

டிரம்ப் அறிவித்துள்ள அமைதி வாரியத்துக்கு அவரே தான் தலைவர். வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, டிரம்ப் மருமகன் ஜெராட் குஸ்னர். பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்ட பலர் உறுப்பினர்கள். டிரம்ப் அறிவித்த புதிய அமைப்பில் இணையலாம் என்று இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் என பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பும் விடுத்துள்ளது.

இந் நிலையில், டிரம்பின் அழைப்பை ஏற்று, அதில் இணைந்து கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்து உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

உலக நாடுகளின் தலைவர்களைக் கொண்டிருக்கும் அமைதி வாரியத்தில் உறுப்பினராகச் சேருமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். புதிய அமைப்பான டிரம்பின் அமைதி வாரியத்தில் பிரதமர் நெதன்யாகு பணியாற்றுவார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us