பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தது அம்பலம்: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்தது அம்பலம்: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் என்ஐஏ சோதனை
ADDED : செப் 08, 2025 12:23 PM

புதுடில்லி: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் என்ஐஏ அமைப்பினர் சோதனையில் இறங்கினர். ஒரே நேரத்தில் பல குழுக்களாக பிரிந்து அவர்கள் சோதனை நடத்தினர்.
பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி செய்வதாக கிடைத்த தகவல்களின் படி இந்த சோதனை நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா, குல்காம், அனந்த்நாக், புல்வாமா மாவட்டங்களில் மொத்தம் 9 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர் போன்று. விரைவில் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் பீஹார் மாநிலத்தில் 8 இடங்களிலும், உ.பி.யில் இரண்டு இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகாரிகள் சோதனையில் இறங்கினர். கர்நாடகா, மஹாராஷ்டிரா மாநிலத்தில் தலா ஒரு இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அனைத்து இடங்களில் ஒரே நேரத்தில் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று என்ஐஏ குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனை மற்றும் சந்தேகத்துக்கு உரிய நபர்களிடமை் விசாரணை, பல மணி நேரமாக நீடித்து வருகிறது.