ADDED : டிச 22, 2025 05:20 PM

புதுடில்லி: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார்.
பீஹார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்று ஆட்சி அமைத்தது. முதல்வராக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந் நிலையில், முதல்வர் பதவி ஏற்ற பின்னர் முதல்முறையாக 2 நாள் பயணமாக நேற்று நிதிஷ்குமார் டில்லி சென்றார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை இன்று சந்தித்து பேசினார். சந்திப்பின் போது துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, மத்திய அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் (எ) லாலன் சிங் உடனிருந்தனர்.
சந்திப்பு குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது;
பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர் லாலன்சிங். பீஹார் துணை முதல்வர் சாம்ராட் ஆகியோருடன் ஒரு சந்திப்பு நடந்தது. பிரதமர் மோடி மற்றும் நிதிஷ் ஆகியோரின் தலைமையில், மாநிலத்தின் நலனையும் நல்லாட்சியையும் அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்வதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதியாக உள்ளது.
இவ்வாறு அந்த பதிவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.

