தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கட்டட அனுமதிக்கு இனி, பி.எப்., இல்லை; சபாஷ் முதல்வரே!

கட்டட அனுமதிக்கு இனி, பி.எப்., இல்லை; சபாஷ் முதல்வரே!

கட்டட அனுமதிக்கு இனி, பி.எப்., இல்லை; சபாஷ் முதல்வரே!


UPDATED : மே 13, 2026 06:55 AM

ADDED : மே 13, 2026 12:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2026 06:55 AM ADDED : மே 13, 2026 12:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது நிருபர்-

ஒரு கட்டடத்துக்கு அனுமதி பெறவேண்டும் எனில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமாக இருந்தாலும் சரி; நகர ஊரமைப்பு இயக்ககமாக இருந்தாலும் சரி, சதுர அடிக்கு 27 ரூபாய், 'பார்ட்டி பண்ட்'(PF/ கட்சி நிதி) என்ற பெயரில், விண்ணப்பதாரர்களிடம் அதிகாரிகளால் வசூலிக்கப்பட்டு ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்ததொகையை தந்தால்தான், கட்டட அனுமதியே கிடைக்கும்.

முன்பு அ.தி.மு.க., ஆட்சியின்போது சதுர அடிக்கு 25 ரூபாயாக இருந்த இந்த 'பார்ட்டி பண்ட்', தி.மு.க., ஆட்சியில் 27 ரூபாயாக அதிகரித்ததே தவிர, கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த இவ்வழக்கம் மாறவில்லை. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, இந்த அடாவடி வசூல் தொகையும் அதிகரித்துக் கொண்டே தான் போனது.

இந்நிலையில்தான், விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு பதவியேற்றபின், நகர ஊரமைப்பு இயக்ககம் எடுத்த முடிவின்படி, இனி, எந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்தும் 'பார்ட்டி பண்ட்' வசூலிக்கப்படமாட்டாது என்றும், தகுதி உடைய விண்ணப்பங்களுக்கான அனுமதி உடனடியாக வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விஷயத்தை ரியல் எஸ்டேட் துறையினரும், வீடு வாங்கும் பயனாளிகளுக்கு தெரிவிப்பதுடன், அவர்களிடம் பார்ட்டி பண்ட் எதுவும் பெறக்கூடாது. அப்போதுதான், அரசின் நடவடிக்கை முழுமையாக மக்களை சென்றடையும் .

சபாஷ் முதல்வரே!

இது நல்லதொரு தொடக்கம். இதுபோன்ற இன்னும் பல அதிரடி நடவடிக்கைகளை, உங்களை நம்பி வாக்களித்த மக்கள் ஆவலுடன் எதிபார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us